போதைப் பொருள் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம

போதைப் பொருள் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம

Update: 2024-03-12 13:39 GMT
போதை பொருள் கடத்தலில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் போதை பொருள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தவறிய விடிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.வேம்பு சேகரன், பட்டணம் பேரூர் கழக செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி மாநில துணைச் செயலாளருமான டாக்டர் வெ‌.சரோஜா அவர்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டணம் பேரூராட்சி அலுவலகம் அருகே மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், பொம்மை முதலமைச்சரை கண்டித்தும், தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எடுத்து கூறி 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மதி, ராஜேந்திரன், வடுகம் பாலன், மாதேஸ்வரி சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் மல்லிகா சின்னதுரை, சிவா முத்து மணி பிஎஸ்எ முன்னாள் தலைவர் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், மகளிர் அணியினர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
Tags:    

Similar News