மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை !
பாலக்கோடு அருகே மனைவி கண்டித்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 05:12 GMT
காவல்துறை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் விவசாயி, இவரது மனைவி பழனியம்மாள்,முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதை பழனியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த முருகேசன் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.