மனைவியை காணவில்லை என கணவன் புகார்

சின்னசேலத்தில் 2 குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-23 13:04 GMT

மனைவியை காணவில்லை என கணவன் புகார்

சின்னசேலம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் மாரிமுத்து, 40; இவரது மனைவி நாகம்மாள், 35; இவர்களுக்கு புவனேஸ்வரன், 12; என்ற மகனும், துர்காதேவி, 10; என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் குழந்தைகள் இருவருடன் வெளியே சென்ற நாகம்மாள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து, அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News