சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம்

Update: 2023-11-18 11:12 GMT

பேரவை கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவேரி ஆர்.எஸ். சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பெண் விசைத்தறி தொழிலாளர்களின் சிறப்பு பேரவை கூட்டமானது நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க உதவி செயலாளர் கே.குமார் தலைமை தாங்கினார் .

சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார் . தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

இதில் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் நலன் குறித்தும் அவர்களுக்கான உரிமைகள் குறித்தும் சட்ட சலுகைகள் குறித்தும், அவர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பெண் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.. பேரவைக்கான ஏற்பாடுகளை விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன் செய்திருந்தார்....

Tags:    

Similar News