வாங்கல் செக்போஸ்ட் அருகே விபத்து - இருவர் படுகாயம்

வாங்கல் செக்போஸ்ட் அருகே வேகமாக சென்ற டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் கணவன் - மனைவி படுகாயமடைந்தனர்.

Update: 2024-05-29 12:10 GMT

கோப்பு படம்

.நாமக்கல் மாவட்டம், மோகனூர், முத்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் வயது 35. இவரது மனைவி ஜானகி வயது 32. இவர்கள் இருவரும் மே 27 ஆம் தேதி இரவு 11 மணியளவில், வாங்கலில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வாங்கல் செக்போஸ்ட் அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கணவனுக்கு லேசான காயமும் ,மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜானகியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குமரவேல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் அறிந்த இவர்களது உறவினர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் வயது 43 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags:    

Similar News