நான் முதல்வன் திட்ட வழிநடத்தினர்களுக்கு பயிற்சி

நான் முதல்வன் திட்ட வழிநடத்தினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-12-08 08:50 GMT

கோப்பு படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி அளிக்க உள்ள வழி நடத்துனர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா மெர்சிரம்யா பயிற்சிக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். இந்த பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 52 கல்வி நிறுவனங்களின் மாணவ வழிநடத்தினர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சிக்கு பிறகு மாணவர்களுக்கு இவர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்.

பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி ,மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் எஸ். ராமர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை பயிற்சியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.

Tags:    

Similar News