நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றால் பிரச்சனை முடியும்

நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றால் பிரச்சனை முடியும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-14 09:53 GMT

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாட்டு பெண்களே கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள், அவர் தனது கருத்தை திரும்ப பெற்றால் பிரச்சனை இத்தோடு முடியும் என்றார். டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் நடவடிக்கை விரைவில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது என்றும் தற்பொழுது 4 மாவட்டங்களில் அறிமுகம் செய்துள்ளோம்.

படிப்படியாக மற்ற இடங்களிலும் அமல்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தாளவாடி மலைப்பகுதியில் கட்டணமில்லா பேருந்து சேவை விரைவில் தொடங்க தொடங்கப்படும்

Tags:    

Similar News