திமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது.

Update: 2024-03-16 12:21 GMT
 சங்கரன்கோவிலில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு விருது நேற்று இரவு நடைபெற்றது. 

நிகழ்ச்சியானது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜலால் செய்திருந்தார். இந்த இஃப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது அன்சாரி இந்து சமய குருக்கள், புத்த பிட்சுகள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News