சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு சீல்

சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-05-24 13:29 GMT
சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு சீல்....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.சிவகாசியை சேர்ந்த மரிய சூசை மகன் அற்புதகுமார்(54).இவர் சிவகாசி பி.கே.என் சாலையில் தாஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.இவர் தனது பட்டாசு கடை அருகே உள்ள கடையை அனுமதி இன்றி குடோன் ஆக பயன்படுத்தி வந்துள்ளார்.

சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் ரோந்து சென்ற போது, பட்டாசு கடை அருகே சரக்கு வாகனம் நின்று உள்ளது. ஆட்டோவில் பார்த்த போது தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து அவர் வருவாய்துறைக்கு தகவல் தெரிவித்தார்.விசாரணையில் பட்டாசு கடைக்கு உரிமம் பெற்று, அனுமதி இன்றி சட்டவிரோதமாக குடோனில் தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.

அங்கு 10 சரவெடி பெட்டி உட்பட 100 பெட்டிகளில் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் அளித்த புகாரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News