சட்ட விரோத பட்டாசு பதுக்கல் - கடைக்காரர் கைது

Update: 2023-11-01 02:32 GMT

ஐயப்பன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஆதிக்கமங்களத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக ரூபாய் 250 மதிப்புள்ள 118 பேன்சி கிப்ட் பாக்ஸ் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சுமார் 29 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு பட்டாசுக்கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. மேலும் பட்டாசுக்கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது லைசன்ஸ் இல்லாமலோ வெடிகள் வைத்திருந்தால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ். பி. ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News