சட்டவிரோத மது விற்பனை - திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில், அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேரை செங்கிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1256 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-01-28 04:12 GMT

கைது 

குடியரசு தினமான வெள்ளிக்கிழமை செங்கிப்பட்டி அரசு மதுபானக் கடை விடுமுறையானதால், அக்கடையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் புதிய கட்டடம் ஒன்றில் சிலர் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. செங்கிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது 3 பேர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  அவர்களிடமிருந்து  1,256 மது பாட்டில்களை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்துவழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெண்டையம்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த அய்யாவு மகன் ராஜேஷ் கண்ணன் (40), மனையேறிப்பட்டி ரெங்கராஜ் மகன் சத்தியமூர்த்தி (36), செங்கிப்பட்டி கருப்புசாமி மகன் ராஜேஷ்குமார் (36) என்பதும் தெரியவந்தது. மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags:    

Similar News