கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் எடுத்துச் சென்றவர் கைது

கள்ளக்குறிச்சி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மது விற்பனை‌ செய்தவரை கைது செய்தனர்.

Update: 2024-02-17 07:57 GMT

சட்டவிரோதமாக மது விற்பனை 

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சித்தால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பச்சையம்மாள், 40; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் எடுத்து சென்றது தெரிந்தது. உடன், பச்சையம்மாளை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News