காஞ்சிபுரத்தில் ரூ. 3.88 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரத்தில் ரூ. 3.88 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

Update: 2024-01-02 08:51 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தமிழ்நாட்டின் கைத்தறித் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், நெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினரை கைத்தறித் தொழிலில் ஈடுபடுத்தவும், இத்தொழில் சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தமிழ்நாடு அரசால் பல்வேறு சீரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு சரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  திறந்து வைத்து,

ரூ.1.15 கோடி மதிப்பில் தமிழ்நாடு சரிகை ஆலை சுற்றுச்சுவர், தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி சாலை, இரு சக்கர வாகன நிறுத்தம் கட்டிடம் மற்றும் ஓய்வு அறைக்கான அடி கல்லினையும் நாட்டினார்கள்.மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி காஞ்சிபுரம், தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு, பயிற்சி சான்றிதழ்களும், நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.156 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், 130 பயனாளிகளுக்கு ரூ.111 இலட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் முத்ரா கடனுதவியும், 30 பயனாளிகளுக்கு ரூ.45.17 இலட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் நலத்திட்ட உதவிகளும், 62 பயனாளிகளுக்கு ரூ.9.81 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டமும், 22 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.56.89 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு சரிகை ஆலையில் சரிகை கொள்முதல் செய்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்க் 1- க்கு ரூ.200/-வீதம் ஊக்கத் தொகையும் ஆக 383 பயனாளிகளுக்கு ரூ.378.87 கோடி மதிப்பிலான கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

இவ்விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ஆனந்தகுமார், கைத்தறி துறை ஆணையர் விவேகானந்தன்,

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News