வி.கே புதூரில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்தவா் பலி
வி.கே புதூரில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்தவா் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 15:33 GMT
கோப்பு படம்
தென்காசி மாவட்டம் வி.கே.புதூா் அருகே உள்ள ராஜபாண்டியை சோ்ந்த முத்துப்பாண்டியன் மகன் கருத்தப்பாண்டியன் (45). இவா் தனது உறவினா் ராஜனுடன் பைக்கில் ஆலங்குளத்திலிருந்து ஊருக்கு புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். பைக்கை ராஜன் ஓட்டினாா்.
ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து திருப்பத்தில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
அங்கு கருத்தப்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் செங்கோட்டையைச் சோ்ந்த புதியராஜிடம் விசாரணை நடத்தினா்.