நாமக்கலில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

புதிய நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மாநில நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து வென்றெடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

Update: 2024-03-03 09:58 GMT

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதல் படி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எட்டு வட்டங்களுக்கான செயலாளர்கள் பதவி ஏற்பு கூட்டம் திருச்செங்கோடு ஒளவை கல்வி நிலைய கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் T.K.ராஜேஸ்வரன் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர் (ஓய்வு) சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தாளாளர் ஒளவை கல்வி நிலையம் திருங்கோடு அவர்கள் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட தலைவராக அணியாபுரம் ம.பெரியசாமி, மாவட்டச் செயலாளராக பாண்டமங்கலம் ஆ. சசிகுமார், மாவட்ட பொருளாளராக குமாரபாளையம் பெ.அப்பாதுரை பதவி ஏற்று கொண்டனர்.

மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள்,மாவட்ட இணை செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி தலைவர் ந.செல்லம்மாள், செயலாளர், சா.ஆதிரை மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள்,வட்டச் செயலாளர்கள் (ஆண்கள்) மற்றும் வட்டச் செயலாளர்கள் (பெண்கள்) ஆகியோர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மாநில நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து வென்றெடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். இறுதியாக மாவட்ட மகளிர் அணி தலைவர் ந. செல்லம்மா நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News