ஆலங்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

ஆலங்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தை சேர்மன் திறந்து வைத்தார்

Update: 2024-03-02 01:56 GMT
ஆலங்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சேர்மன் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் சிவசுப்பிரமணியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, கிளை செயலாளர்கள் பாலகணேசன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News