அச்சிறுபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா

அச்சிறுபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2024-01-05 15:03 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்,மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் பேரூர் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் துறை என பத்துக்கு மேற்பட்ட துறையினர் கலந்து கொண்டனர்.

அச்சரப்பாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளிலும் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பேரூராட்சி தலைவர் நந்தினி, பேரூர் செயலாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அலுவலரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News