கலைஞர் நினைவிடம் திறப்பு - திமுகவினருக்கு அழைப்பு

சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கட்சியினர் கலந்துகொள்ள எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-02-25 15:31 GMT

எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் 

பிப்ரவரி 26 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் முதலமைச்சரால் திறக்கப்பட உள்ள நிலையில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர ,பேரூர் கழக செயலாளர் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட சார்பணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News