சாம்பவா் வடகரையில் நூலகக் கட்டடம் திறப்பு

சாம்பவா் வடகரையில் நூலகக் கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-02-08 09:28 GMT
சாம்பவா் வடகரையில் நூலகக் கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகம், ரூ. 8.10 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. சாம்பவா்வடகரை பேரூராட்சி செயல் அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவா் மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் மாரியப்பன், நகர அதிமுக செயலா் நல்லமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய கட்டடங்களை கடையநல்லூா் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், ஜெயக்குமாா், நிா்வாகிகள் வெங்கடேஷ், இசக்கி, சித்திரைக்கனி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News