4 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கி வைப்பு

கடலூரில் மக்கள் பயன்பாட்டிற்காக நான்கு புதிய 108 வாகனங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் எம்ஆர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-28 06:40 GMT

ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைப்பு

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட தேவனாம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே பன்னீர்செல்வம் 4 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News