வாசுதேவநல்லூரில் அங்கன்வாடி புதிய கட்டிட திறப்பு

வாசுதேவநல்லூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-02-20 07:10 GMT
 அங்கன்வாடி புதிய கட்டிட திறப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்குபுரம் ஊராட்சியில் ரூ.17.50-லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கழகச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் திமுக கழகச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News