புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

பர்கூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-12-28 01:25 GMT

₹30.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம், மல்லப்பாடி ஊராட்சி, மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ: 30.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடத்தினை உணவு மற்றும், உணவுப் பொருள் வழங்கல் துறை, அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்.,MLA, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ்.,MLA கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார்,MP, அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு. இணைந்து குத்துவிளக்கேற்றி சிறப்புறையாற்றி திறந்து வைத்தார்கள்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் என அனைவரும் கலந்துகொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்...

Tags:    

Similar News