சிவகங்கையில் முதன்முறையாக ரோபோடிக்ஸ் வகுப்பறை துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக தனியார் பள்ளியில் நடந்த ஸ்மார்ட் ரோபோடிக்ஸ் வகுப்பறை நிகழ்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2023-11-28 12:31 GMT

சிவகங்கையில் முதன்முறையாக ரோபோடிக்ஸ் வகுப்பறை துவக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முதலாக மானாமதுரை அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில், ஸ்மார்ட் ரோபோடிக்ஸ் வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அப்பள்ளியின் சேர்மன் திறந்து வைத்தார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் ‌கலந்து கொண்டனர். இந்த ரோபோ சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது, ஊர் வரைபடம், எண்கள்‌ எப்படி சொல்ல வேண்டும் என்று மாணவர்கள் மனதில் எளிதில் பதிய வைக்கும் விதமாக இந்த வகுப்பறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதை பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக இந்த வகுப்பு தனியார் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News