பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா

கொளத்தூரில் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2023-12-27 15:28 GMT
தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.. இந்தப் பள்ளிக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ்,திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி,ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன், மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர் காயத்ரி அன்புச் செழியன், மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News