புதுக்கோட்டையில் ஶ்ரீ வீரவண்ணிய குல ஷத்திரியர் சிலை திறப்பு விழா

திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியில் ஶ்ரீ வீரவண்ணிய குல ஷத்திரியர் சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது

Update: 2024-02-20 08:38 GMT


திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியில் ஶ்ரீ வீரவண்ணிய குல ஷத்திரியர் சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியில் ஶ்ரீ வீரவண்ணிய குல ஷத்திரியர் சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஶ்ரீ வீரவண்ணிய குல ஷத்திரியர் சிலை அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் டிகே. ராஜா மற்றும் மாநில மகளிர் அணி தலைவி நிரம்மலாராசா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி பங்கேற்று கிராமிய இன்னிசை முழங்க ஶ்ரீ வீரவன்னிய குல ஷத்திரியர் திருவுருவ சிலையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

பின்னர் வன்னியர் சங்க கொடியை மாநிலவன்னியர் சங்க செயலாளர் டிகே.ராஜா கொடியேனை ஏற்றிவைத்தார் இதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிருவாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்.

கிருபாகரன், நடராசன்குட்டிமணி,மற்றும் பாமக மேற்கு மாவட்ட தலைவர் திருப்பதி மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன் உள்பட கலந்து கொண்டனர் மாநில வன்னியர் சங்க செயலாளர் டிகே.ராஜா பேசுகையில் நாமோ அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அன்புமணியை வருங்காலங்களில் வெற்றி பெற செய்து முதலமைச்சராக ஆக்கவேண்டும் என்றும் ஒற்றுமையாக பாடுபடுவோம் என்று கூறினார்

Tags:    

Similar News