கூடுவாஞ்சேரியில் தண்ணீர் பந்தல் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

கூடுவாஞ்சேரியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.

Update: 2024-05-10 15:35 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

செயல்பட்டு மாவட்டம்,நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்தி ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும்,சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,காஞ்சி நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,பழச்சாறு மற்றும் பழங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ சண்முகம்,நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News