முனுகப்பட்டு கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-07 09:32 GMT

தண்ணீர் பந்தல் திறப்புவிழா 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி சைதை வ. சங்கர் ,மாநிலச் செயலாளர் பிரதமர் நல திட்ட பிரிவு பி.நித்தியானந்தம் ,மாவட்ட துணை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News