பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் பந்தல் துவக்கம்

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-22 08:45 GMT

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது


 பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி தலைமை வைத்து கோடைகால தண்ணீர் பந்தல் வழங்கும் நிகழ்சியை துவக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் வழக்கு விசாரணைக்கு வருகை புரிந்த வாதி பிரதிவாதிகளுக்கும் நீர் மோர் மற்றும் தர்பூசணிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பாபநாசம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன் துணை தலைவர் கம்பன் செயலாளர் இளையராஜா பொருளாளர் பாலச்சந்திரன் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News