சங்கராபுரத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம் !
சங்கராபுரம் நகரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடந்தது.
Update: 2024-04-03 06:03 GMT
சங்கராபுரம் நகரில் பூத் சிலிப் வழங்கும் பணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பூத் சிலிப் வழங்கும் பணியை நேற்று துவக்கிவைத்தார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.எ.ஓ., ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.