அவிநாசியில் ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-06 10:56 GMT

அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகட்டி புதூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  காண்ட்ராக்டர் வேலுமணி என்பவருக்கு சொந்தமான  வி ஆர் வாட்டர் இன்ஃப்ரா கம்பெனி  அலுவலகம்உள்ளது, மற்றும் அவிநாசி காமராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளது.

ஒப்பந்ததாரர் வேலுமணியின் அலுவலகம் மற்றும் வீட்டில் கோவை வருமான வரித்துறையின் அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டவர்கள் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் ஒப்பந்தம் செய்து பணி செய்து வருவதால் ஒப்பந்ததாரர் வேலுமணியிடம் இதுகுறித்த  ஆவணங்கள் சரி பார்ப்பது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அதிவிரைவு படை பிரிவு போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பது சோதனை முடிந்த பின்னரே தெரியவரும். அவிநாசியில் உள்ள ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News