குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பெய்த அதிக அளவு மழையால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-07 10:42 GMT
குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் நேற்று நள்ளிரவு மிதமான மழை பெய்தது. இருப்பினும் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீா்வரத்து இருந்தது.

ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் அருவிகளில் குளித்தனா். இதனிடையே மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்து இருந்தது.

Tags:    

Similar News