ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.;
Update: 2024-07-04 01:37 GMT
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக 200 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு 1500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மழையின் அளவு பொறுத்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.