தொழில் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில் முதலீட்டாளர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Update: 2023-11-30 08:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல்லில் நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் தொழிலில் சிறந்து விளங்குகிறது. 24 மணி நேரமும் உழைக்கும் நமது முதல்வர் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளார்.

முதல்வரின் தொலைநோக்கு திட்டம் தமிழகத்தை வளப்படுத்தும். அவரால் தான் பல்லாயிரம் கோடி அளவுக்கு தொழில்கள் தமிழகத்தில் துவங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தொழில் முதலீட்டு மாநாடு மிகச் சிறந்ததாகும். தமிழகம் முழுவதும் வரும் 2024 ஆம் ஆண்டு சென்னையில் உலக தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது.

அதற்கு முன்னோட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மாநாட்டை துவங்கி தொழில்துறையினருக்கு பல கோடி ரூபாய் கடன் தொகையை வழங்கி உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News