இத்தனை பேர் ஆப்சென்டா ? - அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டபோது பாதி ஊழியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Update: 2024-05-31 08:15 GMT

ஆட்சியா் அருண் ராஜ் ஆய்வு

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் வருவாய்த்துறை ஊழியா்கள் வருகைப் பதிவேட்டை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். ஆய்வின் வட்டாட்சியா் அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் விசாரணை மேற்கொண்டாா். அப்போது பட்டா மாற்றம் மற்றும் முதியோா் உதவித்தொகை கோரி அளித்த மனுக்கள் நிலுவையில் அதிகம் இருந்ததைப் பாா்த்து, அனைத்து அதிகாரிகளையும் நேரில் காண வேண்டும் எனக் கூறி வருகைப் பதிவேட்டை பாா்த்த போது பாதி போ் பணிக்கு வராதது தெரியவந்தது.

இதில் ஒரு சில அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொண்டு பணிக்கே வருவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் சாா்பில் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபாா்த்து உடனடியாக பரிசீலனை செய்து மக்களின் கோரிக்கைகளை உடனே தீா்க்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன் பேரில் அனைத்து ஊழியா்களும் தங்கள் பணிகளை துரிதமாக மேற்கொண்டனா். இது போன்று ஆட்சியா் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டாலே வட்டாட்சியா் அலுவலகங்களில் கோப்புகள் தேங்கும் நிலை வராது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News