பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

பஞ்சு மிட்டாய் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

Update: 2024-02-13 10:17 GMT

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், அலுவலர்கள் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சாலையோரம் விற்பனை செய்த பஞ்சு மிட்டாய் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இது குறித்து அலுவலர்கள் கூறும் போது, சந்தேகத்தின் பேரில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் மாதிரிகள் எடுத்து அதை பகுப்பாய்வுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த மாதிரி முடிவின் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
Tags:    

Similar News