திருப்பூர் நகராட்சி ஆணையாளர் கட்டுப்பாட்டு மையத்தினை ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 15:06 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
மேலும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
உடன் உதவி ஆணையாளர் (நிருவாகம்) கனகராஜ், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.