வடலூர்: பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம்,வடலூரில் பேருந்து நிலைய உட்கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-28 14:14 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5.85 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News