செஞ்சி கோட்டத்தில் சாலைப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு

செஞ்சி கோட்டத்தில் சாலைப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-13 09:20 GMT

பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் செஞ்சி கோட்டத்தில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்றன. அவைகளில் ஒன்றான நாட்டாமங்கலம்-தொண்டூர் சாலை ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் இரு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சாலையின் தரம் குறித்து தணிக்கை குழுவின் உதவி கோட்ட பொறியாளர் சத்தியன்,

உதவி பொறியாளர் அன்சாரி ராஜா, இளநிலை பொறியாளர் பாலச்சந்திரன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலைபணிகளையும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம் கோட்ட பொறியாளர் சிவசேனா விழுப்புரம் உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், செஞ்சி உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி, இளநிலை பொறியாளர் சேகர், தரக்கட்டுப்பாடு அகிலன், உதவி கோட்ட பொறியாளர் மகேஷ், உதவி பொறியாளர் குரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News