கால்வாய் தூர் வாரும் பணி தீவிரம்

Update: 2023-11-09 14:01 GMT

கால்வாய் தூர்வாரும் பணி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - வடலூர் செல்லும் சாலையோரம் கால்வாயில் புதர் செடிகள் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயில் உள்ள புதர் செடிகளை அகற்றி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் நீர் செல்ல ஏதுவாக தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News