இடைநிலை ஆசியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

முத்துக்கடையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி என இடைநிலை உதவி ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-28 02:13 GMT
 ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இடைநிலை உதவி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் தெரிவிப்பது என்னவென்றால் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியான 311ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைது செய்வதை கண்டித்தும் உடனடியாக ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News