சிவகங்கை அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-17 10:37 GMT

தொழிற்பயிற்சி நிலையம் 

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 12-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவா்கள் வருகிற 7.6.2024 வரை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04575-290625, 82200 08486 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News