பாசன கால்வாயை தூர்வாரும் பணிகள் துவக்கம்

திட்டச்சேரி பண்டாரவடை பாசன வாய்க்காலை தூர்வாரும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-08 03:27 GMT

தூர்வாரும் பணி

 நாகை மாவட்டம் திட்டச்சேரி பண்டாரவடை பாசன வாய்க்கால் தூரம் 9 கிலோ மீட்டர் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.செயற்பொறியாளர் காவிரி வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் இளங்கோ,உதவி செயற்பொறியாளர் செங்கவராயன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் உதவி செயற்பொறியாளர்கள் செல்வகுமார்,சரவணன் ஆகியோர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தனர்.இதில் கரிகாலன் கடைமடை விவசாய சங்க செயலாளர் ஹமீது ஜெகபர் மற்றும் விவசாயிகள், பொதுப்பணி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News