திருக்கோவிலூரில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

திருக்கோவிலூரில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2024-05-26 09:37 GMT

பணி நியமன ஆணை வழங்கல்

திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 121 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில்,

சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் டி.வி.எஸ்., அசோக் லேலண்ட், உள்ளிட்ட 10க் கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் 300க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 121 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார், கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை நிறுவனங்கள் சார்பில் வழங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

Tags:    

Similar News