மாணவர்களுக்கு கல்வி கடனுதவிக்கான காசோலை வழங்குதல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற கல்விகடன் முகாமில் ஆட்சியர் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Update: 2024-02-16 02:32 GMT

கடனுதவி

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்கள் எளிதாக கல்விக்கடன் பெறும் வகையில் நடைபெற்ற மாபெரும் கல்விகடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். உடன் கடலூர் மாநகர மேயர் சுந்தரிராஜா, மாநகர துணைமேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. இராஜசேகரன் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News