இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

சிவகங்கை மாவாட்டம், தேவகோட்டையில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

Update: 2024-02-04 10:21 GMT

பட்டா வழங்கல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வருவாய் துறையின் சார்பில், வருவாய் கோட்ட அளவில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கான ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்‌. உடன் மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சரவண பெருமாள், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News