அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அசல் சான்றிதழ் வழங்கல்

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு அசல் தேசிய தொழிற்சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.

Update: 2024-01-24 07:50 GMT

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு 1970 முதல் 2020 வரை அசல் தேசிய தொழிற்சான்றிதழ்கள் (NTC) மற்றும் 2013 - 2017 தோல்வியுற்ற மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் அசல் தொழிற்சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெவித்துள்ளார்.
Tags:    

Similar News