தாராபுரத்தில் ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தாராபுரம் அருகே நொச்சிபாளையத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-01 03:51 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நொச்சிபாளையத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அஇஅதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் அர்ஜுனன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆற்றல் அசோக் குமார்,திருப்பூர் மாவட்ட கழகப் பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி,மாவட்ட அவைத் தலைவர் பி.கே.ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா ஆகியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் குண்டடம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் சோமசுந்தரம் சிறப்பு வரவேற்புரை ஆற்றினார் அதன் பின்னர், தலைமை கழக பேச்சாளர்கள் முத்துமாணிக்கம்,துரைசாமி மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதாவை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் குண்டடத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்வர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சோமசுந்தரம் தலைமையில் அதிமுக கட்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி மகேந்திரன் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்து கொண்டனர்.

மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எளிய ஏழை மக்களுக்கு விலையில்லா சேலைகள் பெண்களுக்கும், ஆண்களுக்கு வேஷ்டிகளும் வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.டி சிவபாலன், சி.ராஜேந்திரன்,பங்கு மகேஷ் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பெண்கள் பொதுமக்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News