தர்மபுரியில் பலாப்பழங்கள் விற்பனை ஜோர்

தர்மபுரி சந்தைப்பேட்டையில்விற்பனைக்கு வந்துள்ள பலாப்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Update: 2024-05-26 04:47 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி,வத்தல் மலை ஆகிய  பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு விளையும் பலாப்பழங்கள் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு பண்ருட்டி பகுதியில் இருந்து பலா பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ பலாப்பழம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல் 3 பலா சுளைகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தர்மபுரி பகுதியில் பலாப்பழம் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

Tags:    

Similar News