சிறைகளில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல், கொடைக்கானல் கிளைச் சிறையில் துாய்மைப்பணியாளர் காலிப் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-06 07:09 GMT

திண்டுக்கல், கொடைக்கானல் கிளைச் சிறையில் துாய்மைப்பணியாளர் காலிப் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்ட சிறை மற்றும் கொடைக்கானல் கிளைச் சிறையில் தலா ஒரு துாய்மைப்பணியாளர் காலிப் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்ட சிறை மற்றும் கொடைக்கானல் கிளைச்சிறையில் தலா ஒரு தூய்மைப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் பொதுப்பிரிவு முன்னுரிமை, எஸ்.சி பெண் முன்னுரிமையற்றது என்ற இன சுழற்சிக்கு ஒதுக்கப்பட்டதாகும்.இப்பணியிடத்தில் நேரடி நியமனத்திற்கு தகுதியான மேற்படி பிரிவினைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tags:    

Similar News