தலைவாசல் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு

தலைவாசல் அருகே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-18 01:54 GMT

தலைவாசல் அருகே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தலைவாசல் அருகே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சார்வாய் புதூர் ஏரியில், சார்வாய்புதூர் நடுவலூர், கெங்கவல்லியை சேர்ந்த சிலர் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்து வாடிவாசல் அவிழ்த்து விடும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், அங்கிருந்த 22 பேரை தலைவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதில் 18 பேர் 17 வயதுக்கு குறைவான வர்கள் என்பதால் அவர்களது பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர். தொடர்ந்து நடுவலூரை சேர்ந்த மணிகண்டன் (31) சபரி (27), அதியமான் (22) ஏழுமலை (19) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News